சனி, 30 செப்டம்பர், 2017

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டுபிடிக்க ஆன்லைனில் தேர்வுத்துறை வசதி

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சான்றிதழ்களில் போலியை கண்டுபிடிக்க, அரசு தேர்வுத்துறை புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும், ௪௫ ஆயிரம் பள்ளிகளில், ௩.௫௦ லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ௧௦ ஆண்டுகளுக்கு முன், பலர் போலி சான்றிதழ்களை கொடுத்து, பணியில் சேர்ந்ததை, பள்ளிக் கல்வித் துறை, ஓராண்டுக்கு முன் கண்டுபிடித்தது.

இதையடுத்து, பணியில் உள்ளோர், புதிதாக சேரும் ஆசிரியர்கள், ஊழியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் பணி துவங்கியது. மாவட்ட அலுவலகங்களில் இருந்து, சான்றிதழ் நகல்கள், சென்னையில் உள்ள தேர்வுத்துறைக்கு அனுப்பப்படும். தேர்வுத்துறை அதிகாரிகள், அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்குவர்.

இந்த நடைமுறையால், லட்சக்கணக்கான ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதில் இழுபறி நிலை உள்ளது. கால தாமதத்தை தவிர்க்கும் வகையில், சான்றிதழ்களின் விபரங்கள், ஆன்லைனில் தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதற்கான பயன்பாட்டாளர் அடையாள எண் மற்றும் ரகசிய குறியீடு எண், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்த குறியீட்டை பயன்படுத்தி, மாவட்ட அதிகாரிகள் அலுவலகத்திலேயே, சான்றிதழ்களை சரிபார்த்து கொள்ளலாம் என, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவுறுத்தி உள்ளார்.

இந்த புதிய முறையால், மாவட்ட வாரியாக, போலி சான்றிதழ் காட்டி பணிக்கு வந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு
உள்ளது.

Income Tax - e Filling செய்வோருக்கு வருமான வரித்துறை, அறிவுரை

வருமான வரி செலுத்துவோருக்கு அனுப்பப்படும் தகவல், சரியாக சென்றடைவதற்காக, தனி நபர்கள், தங்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய, அத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில், 2.9 கோடி பேர், வருமான வரி செலுத்துவதற்காக, 'பான் கார்டு' பெற்றுள்ளனர். ஆனால், அவர்களில், 60 லட்சம் பேர் மட்டுமே, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்கின்றனர். அதனால், அனைத்து தரப்பினரையும், வருமான வரி வலையில் சேர்க்க, 2017 - 18ம் நிதியாண்டில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக, தாங்கள் அனுப்பும் தகவல்கள், உரிய வருமான வரி கணக்குதாரருக்கு போகிறதா என்பதை உறுதிப்படுத்த, வருமான வரித்துறை, புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வருமான வரியை, http://incometaxindiaefiling.gov.in என்ற எங்கள் இணையதளத்தில், ஏராளமானோர் செலுத்துகின்றனர். ஐந்து லட்சத்திற்கு அதிக வருவாய் உடையவர்கள், அந்த இணையதளத்தில், 'இ - பைலிங்' வாயிலாக, வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்வது கட்டாயம். அவர்களில்சிலர், தங்கள் மொபைல் போன் எண் மற்றும் இ - மெயில் போன்றவற்றை அடிக்கடி மாற்றுகின்றனர். அதனால், நாங்கள் அனுப்பும் தகவல், சில சமயங்களில், அவர்களை சென்றடைவது இல்லை.

அதனால், இ - பைலிங் செய்பவர்கள் அனைவரும், தங்கள் முகவரி, வங்கிக் கணக்கு, மொபைல் போன் எண், இ - மெயில் உள்ளிட்ட விபரங்களை, இணையதளத்தில், 'இ - பைலிங்' கணக்கில் பதிவு செய்ய வேண்டும்.பின், மொபைல் போனுக்கு, ஓ.டி.பி., எனும், ஒரு முறை பயன்படுத்தும், 'பாஸ்வேர்டு' அனுப்பி, தகவல்கள் சரிபார்க்கப்படும். இதன் வாயிலாக, வருமான வரி செலுத்துவோருக்கு, தகவல் சென்று சேர்வது உறுதி செய்யப்படும்.

புதன், 27 செப்டம்பர், 2017

7வது ஊதியக்குழு அறிக்கை முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டது.

7வது ஊதியக்குழுவின் இறுதி பரிந்துரை அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. நிதித்துறை செயலாளர் சண்முகம் இறுதி அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தார்.

மே 16ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டது. மே 26, 27ம் தேதிகளில் அங்கீகாரம் பெற்ற சங்கங்களிடம் கருத்து கேட்கப்பட்டது

வியாழன், 21 செப்டம்பர், 2017

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் கூடாது:ஒழங்கு நடவடிக்கை எடுக்கவும் தடை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 
போராட்டத்தில் ஈடுபட்டதால் அதை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழங்கு நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை

​ஜாக்டோ ஜியோ நீதிமன்ற உத்தரவு​

1. செப்டம்பர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை பெற்று அக்டோபர் 30 க்குள் அமல்படுத்த வேண்டும்.

2. அக்டோபர் 23 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள படும் போது அக்டோபர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை அமல் படுத்த முடியுமா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.

இல்லை எனில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குழு அறிக்கை நவம்பர் 30 க்குள் பெறப்படுமா என்பது குறித்து அக்டோபர் 23 அன்று அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

3.  போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கை ஊதிய பிடித்தம் செய்யக்கூடாது

4 . வழக்கு மீண்டும் அக்டோபர் 23 அன்று தள்ளி வைப்பு.

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

மாணவர்கள் உடல், மன வலிமை பெற பள்ளிகளில் யோகா பயிற்சி அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2315 பேருக்கும், சிறப்பு ஆசிரியர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 58 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆசிரியர் பணி நியமனங்களில் அதிக வெளிப்படைத்தன்மையை தமிழக அரசு கடைபிடிப்பதாகக் கூறினார்.

கடந்த ஆறு ஆண்டுகளில் 40,433 முழு நேர ஆசிரியர்கள் 15,169 பகுதி நேர ஆசிரியர்கள், 4,362 ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கல்வித்துறை மீது அதிமுக அரசு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது என்பதற்கு இதுவே சிறந்த சான்று எனக் கூறினார்.

பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என்று கூறிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மத்திய அரசு நடத்தும் அனைத்து தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் செங்கோட்டையன் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன்,  நவோதயா பள்ளி என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதாலும் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாலும் இந்த விவகாரம் குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

7-வது ஊதியக் குழு குறித்த பரிந்துரைகள் 4 முதல் 5 மாதத்தில் அமல்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அதிகாரிகள் கொண்ட அலுவல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் பரிந்துரைகள் 4 முதல் 5 மாதத்தில் அமல்படுத்தப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. 
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  
வழக்கு விசாரணையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜரானார். அரசுத் தரப்பில், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜரானார். 
'4 முதல் 5 மாதத்தில் அமல்'
வழக்கில் வாதாடிய அரசு தலைமை வழக்கறிஞர், ''ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அதிகாரிகள் கொண்ட அலுவல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு செப்டம்பர் 30-க்குள் அறிக்கை தாக்கல் செய்யும். அதன்பிறகு 4 முதல் 5 மாதத்தில் பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.  
2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமலில் உள்ளது. மத்திய அரசும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தையே ஊக்குவித்து வருகிறது. இந்தியாவில் மேற்குவங்கம், திரிபுரா தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பங்களிப்பு ஓய்வூதியமே அளிக்கப்படுகிறது.  
எனினும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் நவம்பர் வரை பதவியில் இருப்பர். இதில் நிதி ஆதாரம், பொருளாதார சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால் இதை அமல்படுத்த நீண்ட காலம் தேவைப்படும். 
மத்திய அரசு அங்கன்வாடி ஊழியர்களுக்கு பகுதிநேரப் பணியைத்தான் வழங்குகிறது. அவர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தாம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7 முதல் ரூ.11 ஆயிரம் வழங்கப்படுகிறது. அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக்க ஆவன செய்யப்பட்டு வருகிறது'' என்றார். 
'இடைக்கால நிவாரணம் வேண்டும்'
ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், ''7 வது ஊதியக் குழு குறித்து குழு அமைக்கப்பட்டு ஓராண்டியாகியும் அவற்றின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்'' என்று தெரிவித்தார். 
இதற்குப் பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், ''இடைக்கால நிவாரணம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. குழுவின் பரிந்துரைகளைப் பொறுத்தே நிவாரணம் அமையும். ஜாக்டோ- ஜியோவின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு பரிசீலித்து வருகிறது'' என்றார். 
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ''7-வது ஊதியக் குழு குறித்த அறிக்கை பரிந்துரைக்கப்பட்ட பிறகு, அதை அமல்படுத்த எவ்வளவு நாட்கள் ஆகும்? பழைய ஓய்வூதிய அமல்படுத்த எவ்வளவு நாட்கள் ஆகும்? இதற்கு நீண்ட காலம் ஆகும் என்றால் இடைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இக்கேள்விகளுக்கு மதியம் 2.30 மணிக்குள் பதிலளிக்க வேண்டும்'' என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். 
வழக்கின் பின்னணி
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் கூட்டு செயல் குழு (ஜாக்டோ- ஜியோ) சார்பில், கடந்த 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இருப்பினும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. இதனால் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த வழக்கு செப். 15-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் ஆஜராகி, நீதிமன்ற தடையாணைக்குப் பிறகும் வேலைநிறுத்தத்தை தொடர்ந்த காரணம் குறித்து விளக்கம் அளித்தனர். 
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை மதித்து உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். அப்படிச் செய்தால் தலைமைச் செயலரை நீதிமன்றத்துக்கு வரவழைத்து உங்களது கோரிக்கையை கவனிக்க உத்தரவிடுவோம். மறுத்தால் போராட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்று தெரியும் எனக் கடுமையாக எச்சரித்தனர். இதையடுத்து 9 நாட்களுக்குப் பிறகு வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறுத்தி அன்று மதியமே அரசு அலுவலர்கள் பணிக்கு திரும்பினர். 
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து செப்.30-க்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்: அரசு தரப்பு உறுதி

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து செப்டம்பர் 30ல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணா கூறியுள்ளார்.
கடந்த 7ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்தது.
எனினும் அரசுஊழியர்கள் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் நீதிமன்றம் கடுமையான கண்டிப்பு காட்டியது. மேலும் உடனடியாக பணிக்கு திரும்பவும் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அரசு ஊழியர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.
 
தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவு
இதனையடுத்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் அடிப்படையில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞர் விஜய நாராயணா நீதிமன்றத்தில் கூறியதாவது:
   
அரசு பரிசீலிக்கிறது
அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட 4 கோரிக்கைகளை அரசு பரிசீலித்து வருகிறது. அனைத்துத் துறை ஊழியர்களின் கோரிக்கைகளும் கேட்கப்படுகின்றன.
செப்.30க்குள் அறிக்கை
இது நிதி சார்ந்த விஷயம் என்பதால் பரிசீலிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. செப்டம்பர் 30ம் தேதிக்குள் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படும். இவ்வாறு விஜய் நாராயணா கூறினார்.
   
இடைக்கால உத்தரவு
அப்போது, அறிக்கை தாக்கல் செய்து 2 நாட்களில் நடவடிக்கை எடுக்காவிடில் 20 சதவீத நிவாரணம் அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இத்தனை ஆண்டுகள் பொறுத்திருந்த அரசு ஊழியர்கள் இந்த மாத இறுதி வரை காத்திருக்குமாறு நீதிபதிகள் கேட்டுக் கொண்டார்.
   
5 மாத அவகாசம்
இதனிடயே சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க 5 மாத கால அவகாசம் கோரியது தமிழக அரசு.

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டை அணிய வேண்டும் தமிழக அரசு உத்தரவு

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசு செயலாளர் டாக்டர் சீ.ஸ்வர்ணா, தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்கள், அனைத்து தலைமைசெயலக துறைகள், அனைத்து துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட நீதிபதிகள், குற்றவியல் தலைமை நீதிபதிகள், அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் உள்ளிட்டோருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–

பொதுப்பணிகள், அரசு பணியாளர்கள் அனைவரும் அலுவலகத்தில் பணியாற்றும் நேரங்களில் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை அணிந்து பணியாற்றுவதில்லை என்பது தொடர்பான புகார்கள் அரசுக்கு வந்துகொண்டு இருக்கிறது. எனவே அரசு பணியாளர்கள் அனைவரும் அலுவலகங்களில் பணியாற்றும் நேரங்களில் அவர்களது போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை தவறாமல் அணிய வேண்டும்.

அடையாள அட்டையில் பணியாளர் பெயர் மற்றும் பதவி ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். அவை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒன்றின் கீழ் ஒன்று இடம்பெறுமாறு இருக்க வேண்டும்.

அறிவுரை வழங்க... 


எனவே அரசு அலுவலகங்களில் பணியாற்றும் துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் தங்கள் கீழ் உள்ள சார்நிலை அலுவலகங்களுக்கு இதுகுறித்து உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

அத்துடன் அனைத்து பணியாளர்களுக்கும் அவர்களுடைய போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை வழங்க வேண்டும். இதனை முறையாக அனை த்து பணியாளர்களும் அணியவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

EMIS - நாம் செய்ய வேண்டிய பணிகள்

நாம் செய்ய வேண்டிய பணிகள்


User name: dise code

Password: ssa officeல் பெறப்பட்டது

Google - emis - tnschool education department -

Enter your school username & password

பின்பு SIGN IN யை கிளிக் செய்க.

Step 1:
 Dashboardல்
School email: உபயோகத்தில்​ உள்ளதாக இருக்கனும்

School mobile: HM mobile no கொடுத்தவுடன்      save மை கிளிக் செய்யவும்.

Step 2 :
Save மை கிளிக் செய்தவுடன் அடுத்ததாக
Reset password பக்கத்திற்கு செல்லும். அதில் change passwordற்க்கு கீழ்
Old password: ssa given
New password: தற்போது புதியதாக உருவாக்குக. அது capital letter, small letter, special character, numerical உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் (அ) கடந்த ஆண்டு password யை கொடுக்கவும்
Conform password: new password கலத்தில் உள்ளதை type செய்க
Submitயை கிளிக் செய்யவும்.

 Step 3:
Student list - student profile (கிளிக் செய்யவும்) - student list class wise & over all strength display ஆகும். அதில் வகுப்பின் மீது கிளிக் செய்யவும் student list section wise தோன்றும். அதில் section A என்பதன் மீது கிளிக் செய்யவும். All student list (in particular class) தோன்றும். இந்த பக்கத்தில் வலது புறம் print , PDF, CSV  என்று இருக்கும் icon யை பயன்படுத்தி print எடுத்தோ (அ) மாணவர்கள் வருகை பதிவேட்டினை கையில் வைத்துக் கொண்டோ
EMIS SITE ல் உள்ள மாணவர்கள் - பதிவேட்டில் உள்ளனரா? என சரி பார்க்கவும்.
அவ்வாறு பார்க்கும் போது தற்போது தங்கள் பள்ளியிலிருந்து left ஆன மாணவர் EMIS site ல் இருப்பின் அம்மாணவரின் பெயர் மீது கிளிக் செய்யவும். தற்போது profile (particular student's) தோன்றும்.
வலதுபுறம் edit / transfer என்று இருக்கும். அதில் TRANSFER யை கிளிக் செய்யவும். பின்பு are you sure? என்பதற்கு yes transfer என்பதை கிளிக் செய்யவும். தவறுதலாக transfer செய்து விட்டால் அப்பக்கத்தை விட்டு வெளியேறும் முன் திரும்ப admit செய்யவும் முடியும். (Transfer செய்து விட்டு திரும்ப class wise student list யை பார்த்தால் மாணவர் எண்ணிக்கை குறைந்து விடும்)
தற்போது TRANSFER பணி மட்டுமே செய்ய வேண்டி உள்ளது.

தற்போதைய தளத்தில் புதிய சேர்க்கைக்காக இன்னும் தரவுகள் கொடுக்கப்படவில்லை.. மாறுதல் பணி முடித்ததும்
விரைவில் சேர்க்கைக்காக திறக்கப்படும்.

Steps for New student entry:

EMIS site ல் dashboardற்க்கு அடுத்து உள்ள student என்பதை கிளிக் செய்யவும். பின்பு create student யை கிளிக் செய்யவும்.
Student registration form தோன்றும். இப்படிவம் கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் எளிமை படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக student photo தேவையில்லை.
கோரப்பட்டுள்ள தகவல்களும் குறைவு (எளிமை).
1.student name
2.adhaar no
3.D.O.B
4.Gender
5.religion, community, sub caste
6.Mother tongue
7. Father/ mother name, occupation, income
8. Mobile no & address
9. Class, section, previous class, admission no, D.O.J, Medium ஆகிய தகவல்கள் மட்டும் போதுமானது
Submit யை கிளிக் செய்யவும்.

EMIS New registration ஒரே பக்கத்தில் முடிந்து விடும்

EMIS தளத்தில் நீல வண்ணத்தில் வரும் எழுத்துகள் மீது கிளிக் செய்யும் போது அடுத்த பக்கத்திற்கு செல்லும் என்பதை நினைவில் கொள்ளவும்

 வேறு பள்ளியில் இருந்து தங்கள் பள்ளிக்கு வந்த மாணவரை admit செய்யும் முறை

EMIS site ல் student - student search என்ற வழிமுறையில் மாணவரின்
1. Emis no
2. Adhar no
3.mobile no
4. Last studied school dise code, class
5. Last studied school postal pincode, D.O.B இவற்றில் ஏதேனும் ஒன்று தெரிந்து இருந்தால் போதும் admit செய்து விடலாம்.

குறிப்பு : தற்போது transfer செய்யும்​ பணி மட்டுமே. Admit செய்யும் பணி அறிவித்த பின்பு மேற்கொள்ளலாம்

அரசு பள்ளி ஆசிரியர்களின் பிளஸ் 2 சான்றிதழ்சரிபார்ப்பு

தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழை சரிபார்க்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும், பட்டதாரி மற்றும் டிப்ளமா ஆசிரியர்கள், அரசின் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
2009ல், இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்குவந்தன.ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளில், ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்க அவகாசம் வழங்கப்பட்டது. 2014ல், அவகாசம் முடிந்தும்,ஏராளமான ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதனால், அவகாசத்தை, 2019 வரை, மத்திய அரசுநீட்டித்துள்ளது. இதன்படி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்கள், மத்திய அரசின் தேசிய திறந்த நிலை பள்ளியான, என்.ஐ.ஓ.எஸ்., அமைப்பில், டிப்ளமா கல்வியியல் படிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில், பிளஸ் 2வில், 50 சதவீத மதிப்பெண் பெறாதோர், என்.ஐ.ஓ.எஸ்., டிப்ளமா படிப்பில் தேர்ச்சி பெற உத்தரவிடப்பட்டுஉள்ளது

.எனவே, தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 65 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழ்களை சரிபார்க்குமாறு, மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதில், 50 சதவீத தேர்ச்சி பெறாதோர், மத்திய அரசின் படிப்பை, 2019 மார்ச், 31க்குள் முடிக்காவிட்டால், பணியில் இருந்து நீக்கப்படுவர் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதன், 20 செப்டம்பர், 2017

NIOS -விளக்கம்

பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் ,31.3.2019 குள் NIOS தேர்வு தேர்ச்சி பெறவேண்டும்

*தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் ( National Institute of Open Schooling (NIOS)) முன்பு தேசிய திறந்தநிலை பள்ளி என்றழைக்கப்பட்டது. இது இந்திய அரசின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி வாரியம் ஆகும்.


1989ல் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா), இந்தியாவின் கல்வியறிவு சதவீதத்தை ஊரகப் பகுதிகளில் அதிகரிக்கவும், மேலும் கல்வியறிவை நெகிழ்வான வழியில் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலும் இந்நிறுவனத்தினை ஏற்படுத்தியது.*

*[1]. NIOS ஒர் தேசியவாரியம் ஆகும், இது ஊரகப்பகுதிகளில் கல்வியறிவை அதிகரிக்கும் வகையில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) & இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை (CISCE) போன்றே உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்துகிறது. மேலும்* *உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு தொழிற்கல்வி படிப்புகளை வழங்குகிறது.*

*NIOS*

*தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம்*

*சுருக்கம் NIOS*
*உருவாக்கம் 3 நவம்பர் 1989 (27 ஆண்டுகளுக்கு முன்னர்)*
*வகை அரசு பள்ளிக் கல்வி வாரியம்*
*தலைமையகம் நொய்டா, உத்திரப்பிரதேசம், இந்தியா*
*அமைவிடம்*
*A-24/25,* *இன்ஸ்டிட்யுசனல் பகுதி, செக்டார் - 62, நொய்டா மாவட்டம், கவுதம் புத்த நகர், உத்திரப்பிரதேசம் - 201 309*

*ஆட்சி மொழி*
*இந்தி &  ஆங்கிலம்*

*தலைவர்*
*ஜே, ஆலம்*

*தாய் அமைப்பு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா)*
*வலைத்தளம் www.nios.ac.in*

*இது இன்றைய நிலையில் உலகின் மிகப்பெரிய திறந்தநிலைப் பள்ளியாக திகழ்கிறது.*

*தற்போது தமிழில் தேர்வு எழுதலாம்*
*குறிப்பாக 3ம் வகுப்பு முதல் மருத்துவம் வரை இங்கே  பயிலலாம் பள்ளி இடை நின்றவர்கள்  10, 12 வகுப்புகளும் படிக்கலாம்.*

+2 வில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் ,31.3.2019 குள் NIOS exam தேர்ச்சி பெற வேண்டும்

 1. பள்ளி திறக்கும்நாளில் இலவச பாட புத்தகம், நோட்டுகள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

2. பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து, இடிக்க, சரிசெய்ய வேண்டியவைகளை BDOற்கு தெரியபடுத்தவும்.

 3. டெங்கு காய்ச்சல் பற்றி அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
4. ஆபத்தான புளுவேல் விளையாட்டை பற்றி அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

5. +2 வில்  50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் ,31.3.2019 குள் NIOS exam தேர்ச்சி பெற வேண்டும்

. இல்லை எனில் அன்று முதல் பணி இழக்க நேரிடும். உடனடியாக தலைமை ஆசிரியர்கள், இ. ஆ. தங்களின் +2 சான்றிதழ் சரிபார்க்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
6. NAS தேர்வு 3,5,8 வகுப்புகளுக்கு இவ்வருடம் அக்டோபர் மாதத்தில் நடைபெறும். அதற்கு மாணவர்களை தயாரிப்பு செய்ய வேண்டும்.

7. அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் எண் இருக்க வேண்டும். அதற்கு ஏற்பாடுகள்​செய்ய வேண்டும்.

8. SMART CLASS தொடக்க நிலையில்4 மற்றும், நடுநிலைப்பள்ளிகளில்​3ம்,

9. அறிவியல் கண்காட்சி வட்டார​அளவில் அனைத்து பள்ளிகளும் கலந்துகொண்டு​ சிறப்பாக அமைய வேண்டும். அதற்கு அனைத்து ஆசிரியர்களும் ஆர்வத்துடன் செயல் பட வேண்டும்.

10. தூய்மை இந்தியா உறுதிமொழி அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டும்.

வியாழன், 14 செப்டம்பர், 2017

அடையாள ஆவணமாக எம்-ஆதாரைப் பயன்படுத்தலாம்’: ரயில்வே அமைச்சகம் அனுமதி

ரயிலில் பயணிக்க இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால், பயணத்தின்போது அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்ட, ஏதேனும் ஓர் அடையாள அட்டையைக் காண்பித்துப் பயணம் மேற்கொள்ளலாம். ஆதார் அட்டைக்காக மத்திய அரசின் தேசிய தனிநபர் அடையாள ஆணையம் (UIDAI), மொபைல் ஆதார் (M-Aadhaar) எனும் செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தச் செயலியில் சேமிக்கப்பட்ட ஆதார் அட்டையை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எம்-ஆதார் செயலியில், பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டைகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆதார் அட்டைப் பதிவின்போது கொடுக்கப்பட்ட செல்போன் எண் கொண்ட ஸ்மார்ட் போன்களில், இந்தச் செயலியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். பாஸ்வேர்டுகள்மூலம் ஆதார் அட்டை தகவல்களைத் திறந்து, அவற்றை அடையாள ஆவணமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். 

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC.) வருமானஉச்ச வரம்பை ரூ 6 லட்சத்த லிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி மத்தியஅரசு உத்தரவு.

விரைவில் பள்ளிகளில் BIO - METRIC ATTENDANCE

அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பணிக்கு வராமல், பாடம் நடத்தாமல், சம்பளம் வாங்குவதை தடுக்க, 'டிஜிட்டல்' விபர பதிவு அமலுக்கு வருகிறது.

 தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், நான்கு லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், அரசு சம்பளத்தில், ஒரு லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.


ஒழுங்கு நடவடிக்கை :


இவர்களுக்கு, தினசரி வருகைப் பதிவு, செயல் திறன், பணிமூப்பு, கல்வித் தகுதி, நடத்தை போன்றவற்றை கணக்கிட்டு, சலுகைகளும், விருதுகளும் வழங்கபடுகின்றன.இதில், பெரும்பாலான ஆசிரியர்கள், பள்ளிக்கு ஒழுங்காக வராமல் இருந்தாலும், பதிவேட்டில் வந்ததாக குறிப்பிடுவர்.

சில ஆசிரியர்கள், பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கும் போது, தங்கள் மீதான புகார், ஒழுங்கு நடவடிக்கை விவகாரங்களை

மறைத்து விடுகின்றனர். இந்த தில்லுமுல்லுகளை தடுக்கும் வகையில், ஆசிரியர்களின் வருகைப் பதிவு மற்றும் பணி விபரங்களை, 'டிஜிட்டல்' முறைக்கு மாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக, ஆசிரியர்களின் பணி பதிவேடு, டிஜிட்டல் எஸ்.ஆர்., எனப்படும், கணினி ஆவணமாக மாற்றப்படுகிறது.


மறைக்க முடியாது :


இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: ஆசிரியர்களின் பணி அனுபவம், முகவரி, வருமான வரி, கல்வித் தகுதி, 'மெமோ' மற்றும் ஒழுங்கு நடவடிக்கை விபரங்களை, தனித்தனியாக பதிவு செய்ய உள்ளோம். ஒரு ஆசிரியரின் பெயரை பதிவு செய்தால், அவரை பற்றிய விபரங்களை, பள்ளி அலுவலகம், மாவட்ட அதிகாரி அலுவலகம், இயக்குனரகம் மற்றும் செயலகம் என, அனைத்து இடங்களிலும் தெரிந்து கொள்ளலாம். எந்த ஆசிரியரும், பள்ளிக்கு வராமல் ஏமாற்ற முடியாது; எந்த விபரங்களையும் மறைக்க முடியாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


ஆசிரியர்களை இடம் மாற்ற முடிவு


மாணவர் சேர்க்கை இல்லாத,ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்களை, இடமாற்றம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 400க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில் செயல் படுகின்றன.
இவற்றில், 42 அரசு உதவிபெறும் நிறுவனங்கள் உள்ளன; அவற்றில், ஒன்பது நிறுவனங்கள்

மூடப்பட்டு உள்ளன. மற்ற நிறுவனங்களில், மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளதால், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வேலை இல்லை; அதனால், பல மாதங்களாக, சம்பளம் வழங்கபடவில்லை. இந்நிலையில், ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மாணவர் சேர்க்கை இல்லாத போதிலும், அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

உதவிபெறும் சிறுபான்மை ஆசிரியர் கல்வி நிறுவனங்கள், சும்மா இருக்கும் ஆசிரியர்களை, அவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு மாற்ற, பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது.சிறுபான்மை அந்தஸ்து பெறாத நிறுவன ஆசிரியர்களை, அரசு பள்ளிகள் அல்லது மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்ற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

வியாழன், 7 செப்டம்பர், 2017

நல்லாசிரியருக்கு வாழ்த்துக்கள்..

தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற  தென்மண்டல அரசு உதவிபெறும் பள்ளிகள் ஆசிரியர் சங்கத்தின்(ASTA) மாநில தலைவரும் பாப்பாக்குடி சரகம் உடையாம்புளி இந்து நடுநிலைப்பள்ளியின்  தலைமையாசிரியருமான திரு. J . தாமஸ் M.A.,M.Ed., அவர்களை வாழ்த்துகிறோம்.

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் ஆசிரியர் தின விழா

 பாப்பாக்குடி சரக அனைத்து ஆசிரியர்கள் இணைந்து  2013-14ம் கல்வியாண்டு முதல் 2016-17ம் கல்வியாண்டுவரை பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா மற்றும் ஆசிரியர் தின விழா முக்கூடல் ஆதிசிவம் திருமண மண்டபத்தில் வைத்து மிகச் சிறப்பாக நடைபெற்றது . விழாவிற்கு திருநெல்வேலி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்                                            திரு.பொ . சந்திரசேகரன்  M.Sc.,M.Ed.,M.Phil.,அவர்கள்  தலைமை தாங்கினார்கள் . பாப்பாக்குடி சரக உதவி தொடக்கக்கல்வி அலுவலர்                                                                                                                                          திருமதி. சு. கல்யாணி .,M.Sc.,M.Phil.,M.Ed.,M.Phil  அவர்கள் முன்னிலை வகித்தார்கள் . பட்டதாரி ஆசிரியர் திரு. இரா. பாலசுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். சங்கரன்கோவில் கூடுதல்  உதவி தொடக்கக்கல்வி  அலுவலர் திரு.ப. சந்திரசேகர் M.A.M.Ed., அவர்கள்  மற்றும் பாப்பாக்குடி வட்டார வள மைய  ,மேற்பார்வையாளர்  திருமதி. சோபியா மெர்சி  அக்னஸ்  ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் . அணைந்தநாடார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு. A.C. ஆறுமுகம் , புதுப்பட்டி இந்து திருமுருகன் நடு நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு. லே.பாஸ்கர், மா னபரநல்லூர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி  தலைமையாசிரியர்  சுரேஷ் முத்துக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திருநெல்வேலி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.பொ . சந்திரசேகரன்  M.Sc.,M.Ed.,M.Phil.,அவர்கள் மற்றும் பாப்பாக்குடி சரக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி. சு. கல்யாணி .,M.Sc.,M.Phil.,M.Ed.,M.Phil  அவர்கள் ஆகியோர்  ஆசிரியர் தின உரை மற்றும் வாழ்த்துரை வழங்கி பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்கள் . புதுப்பட்டி  T.D.T.A நடு நிலைப்பள்ளி , தென்திருபுவனம்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , சடையபுரம் T.D.T.A தொடக்கப்பள்ளி  மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தினார்கள் . புதுப்பட்டி  T.D.T.A நடு நிலைப்பள்ளிதலைமையாசிரியர் திரு. அருள்மணிஅகஸ்டின்  நன்றியுரை கூறினார்கள். விழாவில் பாப்பாக்குடி சரக தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள்  பெரும் திரளாகக் கலந்து கொண்டனர். 


































































ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன

தமிழகம் முழுவதும் கிராமப்புறத்தில் குறைந்த மாணவர் எண்ணிக்கை உள்ள அரசு பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கிராமப்புற மாணவ, மாணவியர் கல்வி அறிவு பெற அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இவர்களுக்காக மதிய உணவும் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில்  கிராமப்புற பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை விட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்பது விதி, ஆனால் பல இடங்களில் ஆறு மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள் என்ற விகிதத்தில் செயல்பட்டு வருகின்றன.

இவற்றால் செலவினங்கள் அதிகரித்து வருவதாக அரசு கருதி 10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் கணக்கிடப்பட்டு வருகின்றன. இந்தாண்டு 10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன.

மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க மாணவர்களை அருகில் இணைக்கப்படும் பள்ளிகளுக்கு அழைத்து செல்ல வேன் வசதி ஏற்படுத்தப்பட உள்ளன. இந்தாண்டு 10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளும் அடுத்தாண்டு 20 மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளும் மூடப்பட்டு அருகில் உள்ள மற்ற பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன.

திருப்புவனம் ஒன்றியத்தில் 62 தொடக்கப்பள்ளிகள், 33 நடுநிலைப்பள்ளிகள், 5 அரசு உதவி பெறும் பள்ளிகள் என 100 பள்ளிகளில் 387 ஆசிரியர்,ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். இதில் 6 ஆயிரத்து 414 மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர்.

இந்தாண்டு திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள அழகுடையான் ( 6 மாணவ, மாணவியர்கள்) புளியங்குளம் (9 மாணவ, மாணவியர்கள்), மேலசொரிகுளம் ( 4மாணவ, மாணவியர்கள்) ஆகிய மூன்று பள்ளிகள் அருகில் உள்ள மற்ற பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஆசிரியர்களின் சம்பளம், சத்துணவு ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்டவை மிச்சமாகும் என கருதப்படுகிறது.

இதற்கான முதல் கட்ட ஆய்வு பணிகள் முடிந்து தமிழக அரசுக்கு முடிவு அனுப்பட்டுள்ளன. ஒவ்வொரு தாலுகாவிலும் இதுபோன்ற கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.